30.5.15
பிராமணாள் மட்டும்..
SC/ST PLEASE EXCUSE..
இந்தப் பதிவைப் பார்ப்பவர்கள் நான்
ஏதோ மிகவும் பிற்போக்கான எண்ணம் கொண்டவன் என நினைக்க வாய்ப்புண்டு.
சிலர் நான் பார்ப்பானராகவோ அல்லது பண்டாரமாகவோ
இருக்கக் கூடும் என எனது வகையறா பற்றி நாகரிகமில்லாமல் தங்களை கீழிறக்கிக் கொண்டு வசைபாடி
தங்களது தரா தரத்தை வெளிப்படுத்தலாம்.
எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனாலும்
நான் பேசப்போகும் இந்த செய்தி உண்மையாலுமே எனது மனதைக் குடைந்து கொண்டிருக்கும் செய்திதான்.
ஏற்கனவே எனது நண்பரது அனுபவத்தை வைத்து (இதோ சுட்டி)
‘ஒதுக்கீடுகளும் அரசாணைகளும் மட்டுமே சமுதாயத்தில் சம நிலையைத் தருமா?’ என கேட்டிருக்கிறேன்.
இந்தப் பதிவு தற்போது நான் படித்த செய்திகளின்
வெளிப்பாடு.
30.5.2015 தேதியிட்ட The Hindu பத்திரிக்கையில்
திரு. சூரியகாந்த் வாமோர் (Thiru. Suryakant Waghmore, Associate Professor and
Chairperson, Centre for Social Justice and Governance, Tata Institute of Social
Sciences, Mumbai and DAAD Visiting Professor, Centre for Modern Indian Studies,
University of Gottingen) என்பவர் சமீபத்தில்
நாளிதழில் வந்த செய்தி குறித்தும் அது சுட்டுகின்ற அறிகுறிகளைக் குறித்தும் விளக்கியிருக்கிறார் (Prejudice disguised as politeness).
செய்தி இதுதான்: மும்பையிலிருக்கும் திருமதி பத்மா ஐயர் ஓரினச் சேர்க்கையாளரான
தனது மகனுக்கு ஒரு இணை தேடி கொடுத்த விளம்பரத்தில் caste no bar (though Iyer
preferred) என கொடுத்திருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
இது தவறா?
அவர் தனது கட்டுரையில் “Does
choosing to marry someone from one’s own cast makes one casteist?” எனவும் வினா எழுப்பியிருக்கிறார்.
இது மட்டுமல்லாது தற்போது இணை தேடி வரும் விளம்பரங்களில் “Caste no bar” எனச் சொல்லிவிட்டு
அடைப்புக் குறிக்குள் “SC/ST, Please excuse” எனச் சொல்வது மிகுதியாகி இருக்கிறது என்கிறார்.
இது இருக்கட்டும்.
சமீபத்தில் ஒரு பதிவிற்கு இன்னொரு பதிவாளார்
தனது மறுமொழியில் ‘வீடு வாடகைக்கு விடும் பிராமணர்கள் பிராமணர்களுக்கு மட்டும் வீடு
என அர்த்தம் தொனிக்க “Vegetarians only” என அறிவிப்பு பலகை எழுதிவைப்பது நாகரிகமா என
சாடியிருக்கிறார்.
இங்கு எனக்கு இரண்டு சந்தேகங்கள்:
1.(அ). தனது இணையைத் தேடிக்கொள்ளும் உரிமை ஒரு மனிதனுக்கு இருக்கிறதா இல்லையா?
அப்படி இருக்கையில் அவனது/அவளது விருப்பப்படி இணையைத் தேர்வு செய்வதில் - including
caste - தவறென்ன? இதில் மற்றையோர்கள் தலையிடுவதோ அல்லது தங்களது கருத்துக்களைச் சொல்வதோ
அவர்களது அடிப்படை உரிமையில் தலையிடுவதாய் ஆகாதா?
(ஆ). ஒருவன் தனது சம்பாத்தியத்தில் கட்டிய தனக்குச்
சொந்தமான ஒரு வீட்டை வாடகைக்கோ அல்லது மற்ற பயனுக்கோ அவனது விருப்பப்படியாக தேர்வு
செய்தவர்க்கு – incuding caste - விடுவது தவறா?
அவனது உழைப்பில் பங்கேற்காதவன் பொதுவுடைமையை பேசி அதைப் பற்றி கருத்துச் சொல்வது நாகரிகமா?
இந்த அளவுக்கு ஒருவருடைய வாழ்வில் மற்றவர் உள் நுழைய அனுமதித்தால் நாளை அந்த அனுமதியை
தங்களது உரிமையாக எடுத்துக் கொள்ளக் கூடிய அபாயம் இல்லையா?
இரண்டாவது:
திரு. சூரியகாந்த் வாமோர் தனது கட்டுரையில்
“The ‘SC/ST, Please excuse’ disclaimer in some matrimonial ads is the new ‘purity
line’ that marks SCs and STs as undesired partners” என தெளிவாக குறிப்பிடுகிறார்.
இதை caste discrimination என்று சொல்வதை விட caste preference எனச் சொல்லலாம்.
இந்த நிலைக்குக் காரணம் என்னவாக இருக்கும்?
ஒரு தாயர் ஓரினச் சேர்க்கையாளனாகிய
தன் மகனுக்கு இன்னுமொரு ஓரினச் சேர்க்கையாளரை திருமணம் செய்து வைக்கத் துணியும் போது இந்த caste preference ஐ விட தயங்குவதேன்?
எனக்கென்னவோ SC/ST களின் பாதுகாப்புக்காக
ஏற்படுத்தப்பட்ட சட்டங்களை சிலர் தவறான முறையில் பயன்படுத்துவதே அவர்களுக்கு எதிராக
திரும்பியிருக்குமோவெனத் தோன்றுகிறது. மற்றவர்களிடையே ஒரு பொதுவான அச்சம் அவர்களுக்கெதிராய்
திரும்பியிருக்கலாம் எனத் தோன்றுகிறது
இதே போலத்தான் பெண்களைக் காக்க போடப்பட்ட
சட்டங்களையும் சிலர் தவறான முறையில் பயன்படுத்துவதால் தற்போதைய இளைஞர்கள் திருமணம்
செய்துகொள்ள தயங்குகின்றனர். அதனாலேயே அவர்கள் non committal living together ஐ
prefer செய்கின்றனர் எனவும் படுகிறது.
மேற்சொன்னவைகள் ஒருவகையான cultural
evolutionary process ஆகத்தான் எனக்குத் தோன்றுகிறது.
மேலும் குறிப்புகளுக்கு:
LEGAL TERRORISM:
MISUSE OF SC/ST ACT :
MISUSE OF DOWRY ACT
இன்னமும் பேசுவோம்.
அன்பன்,
வேதாந்தி.