Followers

Friday, April 8, 2011

ஸ்பெக்ட்ரம் ராசாவுக்கு நன்றிகள்…

8.4.11

ஸ்பெக்ட்ரம் ராசாவுக்கு நன்றிகள்…



ஸ்பெக்ட்ரம் ஊழல் எந்த அளவுக்கு நமது நாட்டிற்குத் தேவையான நல்ல காரியத்தைச் செய்திருக்கிறது என்று இன்னமும் பலருக்குத் தெரியவில்லை. நான் தமிழக முதல்வர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் சொல்லும் ‘எளியவரும் அலைபேசியை வைத்திருக்கும் அளவுக்கு அதனை மிகப் பிரபலமாக்கியது ராசாவின் செயல் ‘ என்று ஊழலே இல்லை எனும் கோணத்தில் சொல்லவில்லை. நான் சொல்ல வந்தது வேறு.

நம் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து ஊழல் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இது தனி மனித ஒழுக்க மீறலாக முதலில் பார்க்கப்பட்டு பின்னர் சகித்துக் கொள்ளும்படியான ஒன்றுதான் எனும் அளவில் சற்றே பரிணாம வளர்ச்சி பெற்று ( தேனெடுப்பவன் புறங்கையை நக்காதிருப்பானா.. எனும் மனப்பாங்கு) பின்னர், ஏறக்குறைய ஒரு கொள்ளை போலவே,  குழுவாக சேர்ந்து செய்யப்பட்டு, தற்போது நாட்டைக் காப்பதற்காக உருவாகியிருக்கிற கட்சிகள், தங்களது கொள்கைகளை அடிப்படையாக வைத்து மக்களிடையே வளர்ந்த அரசியல் கட்சிகள், அதன் நிர்வாகிகள் மற்றும் பலர் எத்தகைய இழப்பிலும் அவமானத்திலும் தங்களது அரசியல் வாழ்க்கையை தேச அளவில் சுரண்டலுக்கு பயன்படுத்தும் அளவிற்கு அசுரத்தனம் எடுத்து விட்டது. 



ஆனால் இவ்வளவு அசுரத்தனமாக ஊழல் உருவெடுத்த பின்னும் நாம் அதனை கீழ் மட்ட அளவில் மட்டுமே விமரிசித்திருக்கிறோம். சாதாரண போக்குவரத்து காவலரிலிருந்து பத்திரப் பதிவாளர் அலுவலகம் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அலுவலகம் ஆகியவைகளின் செயல்பாடுகள் மட்டுமே நமது விமரிசனத்திற்குள்ளாகியது.  இது ஒரு வின்னைமுட்ட வளர்ந்த அசுரனை அவனது நகக் கண்களை மட்டுமே கண்டு விமரிசிப்பதைப்போல்தான் இருந்தது…

ஆனால் இன்று.. நமது ஸ்பெக்ட்ரம் ராசவின் ஊழலின் தயவால் நாம் தலை நிமிர்ந்து வின்னை முட்டும் அதன் பிரம்மாண்டத்தை தெளிவாக காணத் துவங்கியிருக்கிறோம்.

இது மட்டுமல்ல. தற்போதைய இளைய தலைமுறையினர், தங்களிடம் உள்ள கோபத்தையும் வெறுப்பையும் மட்டுமே வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கையில் நமது ராசா அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என வழி காட்டிவிட்டார்.







தற்போது அனைத்து இளைஞர்களும் தற்கால மகாத்மா எனும் அன்னா ஹசாரே வின் பின்னால் கூடிவிட்டனர். அனைத்துத் தரப்பினரும் ஊழல் என்பது ஒரு தனிமனிதனின் உரிமைச் சுரண்டல், ஒரு ஏழையின் வாழ்வுச் சுரண்டல் என்பதை நன்கு உணர ஆரம்பித்து விட்டனர்.



42 வருடங்களாக ஊழலை கண்டுகொள்ளாமல் தூங்கிக் கொண்டிருந்த இந்தியாவை எழுப்பியே தீருவது என்று முடிவெடுத்து விட்டனர். ஊழலுக்கு எதிரான லோக் பால் சட்டத்தை வலியுறுத்தி உலக முழுவதிலும் உள்ள இந்தியர்கள் ஒன்று கூட ஆரம்பித்து விட்டனர்.


இங்கே மேலதிக தகவல்கள்.

 Click here to sign the petition!  : இங்கு உங்கள் பங்களிப்பு

இது நல்லதுதானே. என்ன நான் சொல்வது? ரின் விளம்பரம் பார்க்கிறீர்களல்லவா? அப்புறம் என்ன? கறை நல்லதுதானே?

ஆனால் பாருங்கள், நமது தமிழகம் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறது. இதை எழுப்ப இன்னுமொரு ஸ்பெக்ட்ரம் ராசா தேவையோ என்னமோ?



Let us all support Anna




இன்னமும் பேசுவோம்.

அன்பன்,

வேதாந்தி.


Related Posts Plugin for WordPress, Blogger...