Followers

Friday, August 27, 2010

தின்னுத் திமிரெடுத்தவனை காலம் பின்னிப் பெடலெடுக்கும் கண்ணு…

27.8.10




தின்னுத் திமிரெடுத்தவனை காலம் பின்னிப் பெடலெடுக்கும் கண்ணு…






அய்யா நான் சாதாரனமானவனுங்கோ… எனக்கு உங்க சாமி என்ன வெச்சிருக்குதுங்கோ….

(..ச்சும்மா… ஒரு இதுக்கு வலைப்பதிவிலே வலம் வரும் தமிழ் ஸ்லேங்கை கொஞ்சம் கையாண்டேன்…)



இன்றைக்கு நாம் ஏன் ஒரு நெறியை கடைப்பிடிக்க வேண்டுமென்று பேசப்போகிறேன். இன்று தொலைக்காட்ச்சியிலும், நாளிதழ்களிலும் நான் கண்ட சத்யம் கம்ப்யூட்டர் ராமலிங்க ராஜு வின் புகைப்படங்கள் தான் இந்தப்பதிவினை எழுதத் தூண்டியது.

அதுமட்டுமல்ல. வெகு காலத்திற்கு முன் நடந்த மஸ்டர் ரோல் ஊழலும் நினைவுக்கு வந்தது. அந்த ஊழலில் சிக்கியவர்கள் வழக்கு முடியுமுன்னரே தங்கள் குடும்பங்களை இழ்நது பரிதவித்து உருக்குலைந்து சிதைந்த ஒவியமாய் நின்றது இன்னமும் என் கண் முன்னே நிற்கிறது.

எங்கள் காலத்தில் தமிழ் வகுப்பில் கற்றுக்கொள்கிற பாடங்கள் பொதுவாகவே நெறிப்படுத்துகின்ற பாடங்களாகத்தான் இருக்கும். நாலடியார், நன்னூல், நல்வழி, போன்றவைகள் எல்லா வாழ்வியல் நெறிகளையும் போதிக்கும். உதாரணமாய்



வேதாளம் சேருமே வெள்ளெருக்கம் பூக்குமே

பாதாள மூலி படருமே -மூதேவி

சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே

மன்றோரம் சொன்னார் மனை.

நல்வழி (பாடல் - 23)


பலர் கூடி நீதியுரைக்கும் மன்றத்திலே ஒருவன் மனந்துணிந்து பொய்யுரைத்தானெனில் அவனது குடும்பமும் சுற்றமும் கூடி அழியும் என்கிறார் ஒளவையார்.

நான் இதை என் வாழ்நாளில் கண்கூடக் கண்டவன். நீதிமன்றத்திலே பொய்யுரைத்த ஒருவரின் குடும்பம் கண்ணெதிரே சிதைந்து சீர்குலைந்து போயிற்று. பெயர் சொல்ல ஒருவர் கூட மிஞ்சவில்லை. ஒரு பொய்க்கே இந்தக்கதியென்றால் மற்றதைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.


எனக்கு நான் சிறு வயதில் படித்த கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

ஒரு எலி. மிகவும் சுதந்திரமாக இருந்த ஒரு எலி. சிதறிய தானியங்களை தின்று ருசி கண்ட அந்த எலி ஒருநாள் பேராசை கொண்டு தானியத்தை கொண்டிருந்த பானையின் துவாரம் வழியே உள்ளே சென்று மூக்கு முட்ட தானியத்தை உண்டு தீர்த்ததாம். உண்டபின் அது மிகவும் பருத்துவிட்டதால் அது சென்ற துவாரத்தின் வழியே அதனால் திரும்பி வெளிவர முடியவில்லை. பிறகென்ன… அங்கேயே சிறைபட்டு முக்கி முனகி தன் சுதந்திரத்தை இழந்ததோடல்லாமல் சில மணி நேரத்திலேயே தன் உயிரையும் விட்டதாம்.


அதேதான். முதலில் ஒரு சாமானியன் கேட்ட கேள்விக்கு இப்போது பதில் கிடைத்திருக்குமே…

“அய்யா நான் சாதாரனமானவனுங்கோ… எனக்கு உங்க சாமி என்ன வெச்சிருக்குதுங்கோ….” என்ற கூவலுக்கு “உனக்கு நிம்மதி வெச்சிருக்குதுங்கோ..”ன்னு சொல்லலாமா?


இன்னுமொரு நிகழ்வு. எனது நண்பரது அலுவலகம் மிகவும் பிரபலமானது. அரசு அலுவலகம் தான். பணம் விளையாடக்கூடிய ஒரு இடம். ஆனாலும் புகார்கள் இல்லை. காரணம் பயணீட்டாளர்கள் தங்கள் தேவைக்கு அடிக்கடி அந்த அலுவலகத்தை நாடவேண்டியிருப்பதாலும் பணி சற்றே முடங்கினாலும் தங்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும் என்பதாலும் யாரும் புகார் செய்வதில்லை. இப்படிப்பட்ட அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு ஸ்டெனோ. அலுவலகத்தின் உச்ச மேலதிகாரிக்கு ஸ்டெனோவாக பணிபுரியவெகு பிரயத்தனப்பட்டு இறுதியில் தன் ஆசை கைகூடவே மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போனார். பிறகென்ன.. ஒரே கொண்டாட்டம் தான். தலை கால் புரியவில்லை மனிதருக்கு. கண் மட்டும் தெரியுமா என்ன? பேராசை கண்ணை மறைத்துவிட்டது. இப்போது அய்ந்தாண்டு இறுதியில் மணிதர் விஜிலென்சின் பிடியில். ஒரு ஸ்டெனொவாக செயல்பட்டே மணிதர் மூண்று கோடிக்கு மேல் சொத்து சேர்த்து விட்டார். இப்போது கணக்கு காட்ட முடியாமல் விழி பிதுங்குகிறார்.முடிவென்னவாகும்..?

என்னவாகும்...
என்ன? எலி பானை கதை நினைவுக்கு வருகிறதா?

இதைத்தான் தலைப்பில் சொல்லியிருக்கிறேன்.


தின்னுத் திமிரெடுத்தவனை காலம் பின்னிப் பெடலெடுக்கும் கண்ணு…என்று.

இது மட்டுமல்ல. நான் முந்தய பதிவில் எழுதிய வரமும் சாபமும் இந்த பதிவிற்கும் தொடர்புடையதாக இருக்கிறதா..?

இந்தப் பதிவு ஒரு break.. அடுத்த பதிவில் ஒரு சீரியசான ஒரு பேச்சு.



அன்புடன்


வெட்டிப்பேச்சு வேதாந்தி.

2 comments:

  1. நாங்கள் கடவுளை நம்பாதவர்கள். அதனால் இதற்கெல்லாம் பயந்து நிறுத்தி விட மாட்டோம்.

    ReplyDelete
  2. பலர் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் பயம் வரும் போது எல்லாம் முடிந்து விடும். இழப்பு மிகப் பெரியதாய் இருக்கும்.

    தங்கள் பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    வேதாந்தி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...