Followers

Thursday, August 12, 2010

வந்ததும் போனதும்

12.8.2010

வந்ததென்ன போனதென்ன?

வாத்தியாரைக் கேட்டால் கண்ணதாசணின் கவிதை ஒன்றை கட்டவிழ்த்து விடுவார். இந்த வலைப்பதிவிற்கு உந்துதலே வாத்தியாரின் வகுப்பறை தான். அவருக்கு என் நன்றிகள்.

வெகு நாட்களாகவே எனக்குள் ஒரு குமுறல் உண்டு. படித்தவன் ஒன்றுக்கும் உதவ மாட்டானா? படிப்பு ஆற்றலை மங்கச்செய்து விடுகிறதா? இல்லை வெறும் சினிமாக் கதாநாயகர்கள் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்கிறார்களா என்பது தான் அது. எங்கு பார்த்தாலும் பலமுள்ளவனே ஜெயிக்கிறான் (?). பலத்தைக் காட்ட வன்முறையை பிரயோகிக்கிறான். இது சரியா? வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தான் வெல்ல பல compromise களை செய்கிறார்கள். இந்த விட்டுக்கொடுத்தலினால் அவர்கள் பெற்றது உண்மையான வெற்றியா? அந்தக்கணம் அவர்களுக்குத் தோன்றிய அந்த வெற்றி மறுபடியும் ஒரு 20 வருடங்கள் கழிந்து வெற்றியாகவே தோன்றுமா? இது குறித்து ஒரு அலசல் வேண்டாமா?

உதாரணமாக பலர், வாழ்க்கையில் வெற்றியென்பது பணம் சம்பாதிப்பதுதான் எனும் பலர், பல தர்மங்களை விட்டுக்கொடுத்து பணம் சம்பாதிக்கின்றனர். அப்படி 'வெற்றியை' அடைந்தவர்கள் கடைசிவரை வெற்றியைக் கொண்டிருந்தனரா? இவர்கள் வெற்றியடையும் போது இவர்களிடம் தோற்றுப் போனவர்கள் கடைசிவரை தோற்றேதான் போனார்களா....

இது ஒரு தேடல்.

வந்ததும் போனதும் இருக்கையில் இடையே நிலைத்ததென்ன?  இதுதான் எனது கேள்வி. பின்னூட்டமிடுங்கள். அலசுவோம். மேம்படுவோம்.

அன்புடன்,

வேதாந்தி.





1 comment:

  1. netru ungal comment enathu blog l paarthen.



    muthal pinnotathil ungalin eluthu kavarnthathai vidavum yosikka seythathu sir.



    neram irukkumpothu ungalin pazaya pathivukal padikka mudivu seythirukkiren.

    nandri.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...