Followers

Thursday, August 26, 2010

வெற்றிகளும் தோல்விகளும்

26.8.10


வெற்றிகளும் தோல்விகளும்.










வெற்றிகளும் தோல்விகளும் சில காலத்திற்கே மனதில் அதற்கேற்ற உணர்வுகளைத் தோற்றுவிக்கும். அதற்குப் பிறகு… அமைதிதான். இதற்கு அப்போது சுரக்கும் சில உடற்கூறு ரசாயணங்களே இந்த மகிழ்ச்சி/துக்கம் ஆகிய உணர்வுகளுக்குக் காரணம் என்கிறது அறிவியல்.

ஒரு வகையில் வெற்றிகளும் தொல்விகளும் பெரும்பாலும் வெறும் சூழல் மாற்றங்களை மட்டுமே நமக்கு அளிக்கிறது. இந்த சூழல் மாற்றங்கள் நமது பார்வைக்கேற்ப நமக்கு வெற்றி பெற்ற அல்லது தொல்வியடைந்த உணர்வுகளை நம்முள் தோற்றுவிக்கிறது.


உதாரணத்திற்கு ஒரு மாணவன் பள்ளியிறுதி வகுப்பில் தேற்சி பெறுவதை எடுத்துக்கொள்வோம். இங்கு மூன்று சூழல்களை ஆராய்வோம்.


முதல் சூழல்:

தேற்சிபெற்ற மாணவன் அதிக மதிப்பெண் பெற்று தேற்சி பெற்றுள்ளான். அவனுக்கு அதிக மகிழ்ச்சி. அவனது நோக்கம் IIT இல் சேருவது. அவனது நோக்கம் நிறைவேறுகிறது. அவன் அதிக மதிப்பெண் பெற்ற மகிழ்ச்சி சில காலம் அவனுள் இருந்து பின் மறைகிறது. அதற்குப் பின் தொடரும் அவனது வாழ்வில் அவனது மதிப்பெண்கள் இடம் பெறுகிறதில்லை.


இரண்டாம் சூழல்:

தேற்சிபெற்ற மாணவன் சராசரி மதிப்பெண் பெற்று தேற்சி பெற்றுள்ளான். அவனுக்கு சற்றே ஏக்கம். மற்றபடி எதுவும் இல்லை. அவனும் ஒரு பொறியியல் பாடமோ அல்லது அறிவியல் பாடமோ எடுத்து தன் முயற்சியை தொடருகிறான். அதற்குப் பின் தொடரும் அவனது வாழ்விலும் அவனது மதிப்பெண்கள் இடம் பெறுகிறதில்லை.


மூன்றாம் சூழல்:

மாணவன் தேற்சியுறவில்லை. மனம் ஒடிந்து துக்கிக்கிறான். அவனுக்கு இரண்டு வழிகள்தான் உண்டு. ஒன்று படிப்பைத்தொடருவது. மற்றொன்று ஏதேனும் வேலையைத்தேடுவது இங்கும் அவன் ஓரு முடிவெடுத்து தன் வாழ்வைத் தொடர்ந்தபின் அவனது மதிப்பெண்கள் முக்கியத்துவம் பெறுகிறதில்லை.


மேற்சொன்ன எடுத்துக் காட்டுகளில் வென்றவர் யார்? தோற்றவர் யார்?









வென்றவரும இல்லை தோற்றவரும் இல்லை. மூன்று உதாரணங்களிலும் சூழல் மட்டுமே மாறியுள்ளது.



ஆங்கிலத்தில் ஒன்று சொல்வார்கள். ‘one who  has the last laugh wins’ இதில் சொல்லியுள்ள ‘last’ என்பது எப்போது? இதுவும் ஆட்களைப் பொறுத்து மற்றும் சூழலைப் பொறுத்து.


எனவே வெற்றியென்பதும் தொல்வியென்பதும் வெறும் சூழல் மாற்றம் தான் எனக்கொள்ளலாமா?


இன்னமும் தெளிவில்லையா?


சரி. மேற்சொன்ன எடுத்துக்காட்டுக்களை சற்று நீட்டிக்கிறேன்.



IIT யில் சேர்ந்த மாணவன் தனது இரண்டாம் செமஸ்டரில் மதிப்பெண் சற்றுக் குறைந்துவிட்டதென விடுதி அறையில் தூக்கிலிட்டுக் கொண்டான். ஆனால் சரியான நேரத்தில் அவனது அறைத் தோழன் பார்த்து விட்டதால் அவனை உயிர் பிழைக்க வைத்தனர். உயிர் பிழைத்தானே தவிர அவனது மனநிலை பிறழ்ந்து போனது.


அறிவியல் பாடம் எடுத்த மாணவன் முதுகலைப் பட்டம் பெறுகிறவரையில் சராசரி மாணவனாகவே இருந்தான். ஆனாலும் அலட்டிக்கொள்ளவில்லை. முனைவர் பட்டமும் பெற்று வெளிநாட்டில் ஆசிரியராய் வேலை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றான்.


பள்ளியிறுதித் தேர்வில் தொல்வியுற்ற மாணவன் தனக்கிருந்த மொழித்திறனை பலப்படுத்தி மேலும் சில கிழக்காசிய மொழிகளைப் பயின்று ஒரு மொழிபெயர்ப்பாளனாய் வளர்ந்து பல மேலிட தொடர்புகளைப் பெற்று தனக்கென ஒரு இடத்தினைப் பிடித்துக்கொண்டு out sourcing business லும் வளர்ந்தான்.

இப்போது சொல்லுங்கள் வெற்றி பெற்றவர்கள் யார்?

சற்றுப் பொறுங்கள் இன்னும் கொஞ்சம் நீட்டிக்கிறேன்.

மனநிலை பிறழ்ந்தவனை பெற்றோர்கள் கருத்தாய் கவனித்து அவனது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த ஒரு ஏழைப் பெண்ணை அவனுக்கு திருமணம் செய்துவைத்தனர். அந்தப் பெண்ணுக்கு அவனைப்பற்றியும் அவனது குடும்பத்தைப் பற்றியும் ஏற்கனவே தெரியுமாதலால் அவன் மீது பாசத்தைப் பொழிந்து குடும்ப உறவினை வளர்த்தாள். அவளது பாசத்தால் மிக மோசமாக இருந்த அவனது நிலை சற்று நிலை கொண்டது. தம்பதியர் அருமையான பிள்ளைகள் இரண்டு பெற்றுக்கொண்டனர்.

வெளிநாட்டில் ஆசிரியர் வேலை பார்த்தவன் அந்தப் பல்கலைக் கழகத்தில் திடீரென நடந்த ஒரு துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்குப் போய் அதே நிலையிலேயே தன் தாய் நாடு கொணரப்பட்டு மருத்துவ பராமரிப்பில் உள்ளான். எப்போது வேண்டுமானாலும் விழிக்கலாம் விழிக்காமலும் போகலாம்.


Out sourcing business ல் வளர்ந்தவன் ஒரு பெருந்தனக்காரரை கவர அவர் அவனது திறமையைக் கண்டு மெச்சி தன் ஒரே பெண்ணை மணமுடித்துக் கொடுத்தார். மணமுடித்த ஒரு வருடத்திலேயே தன் கணவன் ஆண்மையற்றவன் என்ற முறையீட்டில் விவாகரத்துக் கோரி அந்தப் பெண் வழக்குத் தொடுக்க இவன் மனமொடிந்து குடிப்பழக்கத்திற்கு ஆளாகி தன் தொழிலையும் கவனிக்க முடியாது போய் பெரும் பொருளிழப்பிற்கு ஆளானான். மீண்டும் மீள வழியறியாது தவிக்கிறான்.


என்ன. குழப்பமாய் இருக்கிறதா?

வகுப்பறை வாத்தியாரின் - சுப்பைய்யா வாத்தியார் - வலைப்பதிவைப் படிப்பவர்களுக்கு அவரது பதிவில் வந்த குதிரைக் கதை நினைவுக்கு வரும். நான் மேலே சொன்னவைகள் நிகழ்வுகள். பதிவு நோக்கு கருதி அதன் உயிர் சிதையாமல் மட்டும் கொடுத்துள்ளேன்.



மேற்சொன்னவைகளின்படி பார்த்தால் ‘last laugh’ ல் உள்ள ‘last’ என்பது வாழ்க்கையின் இறுதி என்றுதானே ஆகிறது? ஆக முழு வாழ்க்கைதான் ஒரு game. இதன்படி நம் வாழ்வின் இறுதிவரை நமக்கு கிடைப்பது சூழல் மாற்றங்கள் மட்டுமேயல்லாது வேறு ஒன்றுமல்ல எனக் கொள்ளலாமா?



இந்த சூழல் மாற்றங்களைப் பற்றியும் அதனை நாம் முற்போக்காக கையாளுவது பற்றியும் அடுத்த பதிவில். இந்தப் பதிவிற்கும் முந்தைய பதிவிற்கும் உள்ள தொடர்பு பற்றியும் அடுத்த பதிவில் பேசுவோம்.



உங்கள் எண்ணம் என்ன? பின்னூட்டமிடுங்கள்.



அன்பன்

வெட்டிப்பேச்சு வேதாந்தி.

1 comment:

  1. 3 vevveeru sampavangal enna solla varukirathu theriyavillai . aanal sinthikka vaitha pathivu sir.


    sinthikkiren.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...