Followers

Friday, July 15, 2011

எனக்கென்ன லாபம் எம்பெருமானே…?

15.7.11

எனக்கென்ன லாபம் எம்பெருமானே…?


உயிர் எடுத்து உயிர் கொடுத்து
கடும்  உழைப்பில் அதை வளர்த்தும்
ஊண் பெருக்கியும்
எனக்கென்ன லாபம் எம்பெருமானே?

உயிர் கரைத்து ஊறிய முலைப்பாலை
உறிஞ்சிக் குடித்த குஞ்சு
என் ஈரலைத் தின்றபின்னும்
இதயத் தசை தேடுதே…

 
உயிரறுக்கத்  துணிந்தும்
உறவறுக்கும் வகையறியேனே
பரமனே , பட்டது போதும்
சட்டென விடுதலை தாராயோ
  




அன்பிலாக்  காடாய் புதர் மண்டி
அடர்ந்த இருள் பரவி
வெறுப்பெனும் பிசாசு விரவிப் பிடிக்க
தள்ளாமையின் தனிமை எனை வாட்ட..

இத்துனை துன்பமும் என்னை
காதலியாய் எட்ட நிற்கும் உன்
மடி தேடி அழச் செய்யுதே
மார்க்கூட்டில் முகம் புதைய ஏங்குதே..






நினையன்றி வேராரும் கரிசனம் கொள்ளாரே
தாமசியாது சம்பந்தனைப் போல் அழும் எனை அம்மையே
உன் முலைஈந்து காப்பாய் இதை யன்றி இப்பிறவியில்
எனக்கென்ன லாபம் எம்பெருமானே..


விடுதலை வேண்டியே
நின் திருவடிகள் சரணனடைந்தேன்
அம்மையே அப்பனே காத்தருள்வாய்
என்னை ஏற்றருள்வாய்.

நீங்காத நினைவுகளுடனும், வேண்டுதல்களுடனும்


அன்பன்,

வேதாந்தி.


2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...