Followers

Showing posts with label tasting success. Show all posts
Showing posts with label tasting success. Show all posts

Monday, September 6, 2010

ஒரு தலைவனைத் தொடரலாமா?

6.9.10

ஒரு தலைவனைத் தொடரலாமா?


வரம் சாபமானது எப்படி..? சாபம் வரமானது எப்படி? பகுதி - 3








ஒருவரை முன் மாதிரியாகக் கொள்ளலாம். ஆனால் அவரை அப்படியே பின் தொடரலாமா?


ஒரு தலைவனைப் பின் தொடர்தல் நல்லதா என்பது குறித்துப் பேசுவோம்.

நாம் பேசிக்கொண்டிருப்பது நமது தொல்விகளை வெற்றிகளாக்குவது பற்றியும் மற்றும் நமது வெற்றிகளை நிரந்தர வெற்றிகளாக்குவது பற்றியும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். இதில் மிக முக்கியமான இரண்டு சூழல்கள் பற்றியும் அதன் காரணிகளைப் பற்றியும் மிகத்தெளிவாக நாம் அறிந்திருக்க வேண்டியிருப்பதால் ஒவ்வொன்றையும் சிறுகச் சிறுக பேசிக்கொண்டிருக்கிறோம்.

சூழல்கள் இரண்டு. ஒன்று அகச்சூழல். மற்றொன்று புறச்சூழல்.

இதுவரை வந்த பேச்சுக்களில் அகச்சூழல் மற்றும் அதன் காரணிகளைப் பற்றிப் பேசினோம். இப்போதும் அதையேதான் தொடர்கிறொம்.

சென்ற பதிவில் பணிக் குழுமத்தின் நோக்கங்கள் ( corporate goals) மற்றும் சமுதாய நோக்கங்கள் ( community goals) மற்றும் நமது தனிப்பட்ட நோக்கு (individual goal) ஆகியவற்றைப் பற்றி பேசினோம்.


சமுதாய நோக்கங்கள் மற்றும் குழுமத்தின் நோக்கங்கள் நமது நோக்கங்களை பாதிக்கக் கூடாது என்றும் முன் பதிவில் பார்த்தோம்.

சிலர் குழுமத்தின் நோக்கோடு தனது நோக்கினையும் இணைத்துக் கொள்வதும் நடக்கிறது. இது சில நேரங்களில் இவர்களது தனி நோக்கினை குழு நோக்கிற்காக தியாகம் செய்யும் அளவிற்கு இவர்களை குழுமம் சார்ந்தவர்களாக மாற்றிவிடும். இந்த விளைவு குழுமத்திற்கு மிகவும் உயர்ந்தது. இது கருதித்தான்- இதை நோக்கித்தான் - இன்னமும் பெருமளவு குழுமங்களில் தங்களது குழுமங்களின் பங்குகளை ஊக்கப் பங்குகளாக தரும் வழக்கத்தினைக் கொண்டுள்ளனர். பெரும்பான்மையான குழும நிறுவனர்கள் (corporate founders) குழும நோக்கும் தனது நோக்கும் ஒன்றாகவே கொண்டிருப்பர்.


இங்கு ஒரு தலைவனைப் பின் தொடர்தல் குறித்துப் பார்ப்போம்.


தலைவன் என்பவன் தனது குறிகோள் குறித்து ஒரு தெளிவான சிந்தனை கொண்டவன். குறிக்கோள் தெளிவானதென்றால் அதை அடைவதற்கான பாதை குறித்தும் அவனுக்கு ஒரு தெளிவான சிந்தனை இருக்கும். ஆக நாம் தொடர்பவர் அல்லது தொடரும்படி நம்மை ஈர்ப்பவர் மிகுந்த தெளிவானவர் என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டாம். எனவே இவரைத் தொடர்தல்  குறித்து இரு மடங்கு நாம் தெளிவாக இருக்கவேண்டும்.





நாம் அவரைத் தொடரலாமா வேண்டாமா என்பது தான் இப்போது நாம் நிர்ணயிக்க வேண்டியது. இது மிகவும் முக்கியம். ஏனெனில் ஒருவரது infatuation or influence நமது சிந்தனையை மிகவும் பாதிப்பிற்குள்ளாக்கக் கூடியது.இதில் நமக்குத் தெளிவில்லாததனாலேயே தீக்குளிப்புச் சம்பவங்கள் நடக்கின்றன. இது நமது நாட்டில் மட்டுமே நடக்கக் கூடிய ஒரு கொடுமையான நிகழ்வு.


நான் ஏற்கனவே கூறியதுபோல் ஒருவன் தனது நோக்கோடு சமுதாய நோக்கு அல்லது குழுமத்தின் நோக்கினை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது அவனது தனி மனித உயர்விற்கு உகந்ததாகும். இங்கு நான் ஒருவன் சுயநலவதியாக இருப்பதைச் சொல்லவில்லை. தன்னைச் சீர்படுத்திக்கொள்வதென்பது மிகவும் முதன்மையானது. இது அவனது சிந்தனையை தெளிவாக்கும். இத்தகைய ஒருவனே சமுதாயத்தைக் குறித்தும் சரியான பார்வையினைக் கொண்டிருப்பான்.இது குறித்து பின்னர் பேசுவோம்.

மேலே சொன்னது போலல்லாமல் ஒருவன் தனது நோக்கோடு சமுதாய நோக்கினையும் கலந்து கொண்டிருந்தானால்அவன் தனது சமுதாய நோக்குப் போர்வையில் சுய முன்னேற்றத்திற்கான வழி வகுத்துக் கொண்டுள்ள கபட வேடதாரி. அவனை தொடர்வது மிகவும் ஆபத்தானது.


இப்படி அல்லாது சமுதாய நோக்கே தனது நோக்காக கொண்டுள்ள நபர்களே தலைமை தாங்கும் தகுதியுடையவராகின்றனர். அவர்க்கென ஒரு தனி நோக்கும் அதற்கான தேவையும் அவர்களுக்கு இருக்காது.இதற்கு உதாரணமாக ராணுவத்தை எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு தனி நோக்கு கிடையாது. வெறும் சமுதாய நோக்கு மட்டும் தான். அதே போல் சில தலைவர்கள் தங்களது குடும்பத்தினை கருதாது பொதுநோக்கு மட்டும் கருதியே வாழ்ந்துள்ளனர், வாழ்கின்றனர். சிலர் தமது வெற்றியை, நோக்கை, சமுதாயத்திற்கே அர்ப்பணிக்கும் வகையில் பெரிதாய்க் கொள்கின்றனர். நமது முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்களை இதற்கு உதாரணமாய்க் காட்டலாம்.




சில நேரங்களில் சமுதாய நோக்கினை மட்டுமே தமது நோக்காக கொண்டிருக்கும் தலைவர்கள் தமக்குப் பிடித்திருந்தாலுமஅவர்களை அப்படியே தொடராமல் , தமது சிந்தனையால் அந்த நோக்கினை மேலும் சிறப்பாக்கி தனக்கென தனி வழி கொண்டவர்களும் உண்டு. பெரியார் - அண்ணா மற்றும் காந்தி - நேதாஜி போன்றொரை இதற்கு எடுத்துக் காட்டாய்ச் சொல்லலாம்.

எனவே தெளிவான சிந்தனை கொண்டவர்களே தொடர்தலில் சிறப்பான முடிவெடுக்க முடியும்.


தெளிவான சிந்தனை தனி மனித வெற்றிகளுக்கு மட்டுமன்றி சமுதாயத்தின் சிறப்பான வெற்றிகளுக்கும் மிக முக்கியமானதாகிறது.


இன்னமும் பேசுவோம், சிந்திப்போம்.


அன்பன்

வேதாந்தி.

Monday, August 30, 2010

வரம் சாபமானது எப்படி..? சாபம் வரமானது எப்படி? பகுதி - 1

30.8.10

வரம் சாபமானது எப்படி..? சாபம் வரமானது எப்படி?



மனிதன் கல்லைத் தீட்டியபோதல்ல…தீட்டிய கல்லுடன் பதுங்கிய போதுதான் மிகச்சிறந்த ஓர் ஆயுதத்தினை உபயோகிக்க கற்றுக்கொண்டான். அதுதான் அறிவுஎன்னும் ஆயுதம். கல்லுடன் பதுங்கியது தனது எதிரியான விலங்கினை வெல்வதற்காக அவன் போட்ட முதல் strategy.


நான் முந்தைய பதிவில்(வரமும் சாபமும். சுட்டி: வரமும் சாபமும் ) குறிப்பிட்டிருந்ததை கவனிக்க. அதில் வரமெல்லாம் வரமல்ல என்றும் சாபமெல்லாம் சாபமல்ல என்றும் காட்டியிருந்தேன். தற்கால சூழலுக்கு இந்தக் கதை பொருந்துமா என்பது பலரின் சந்தேகம்..



சரியான வகையில் பயன் படுத்தும் போதுதான் ஆயுதமோ அல்லது அறிவோ நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இப்போது நான் மற்றொரு பதிவில் (வெற்றிகளும் தோல்விகளும். சுட்டி:  வெற்றிகளும் தோல்விகளும்) சொல்லியிருப்பதையும் நினைவில் கொள்க. இந்தப் பதிவில் வெற்றிகளும் தோல்விகளும் மனதில் உணரப்படும் ரசாயணமாற்றங்களைத் தவிர்த்துப் பார்த்தால் வெறும் சூழல் மாற்றங்களே என்று காட்டியிருந்தேன். இன்னமும் சரியாகச் சொல்லப்போனால் சூழல்கள் நமக்கு ‘சாதகமாக’ இருந்தால் நாம் வெற்றி பெற்ற உணர்வை அடைகிறோம். அல்லவென்றல் அதற்கு மாறான உணர்வு மேலோங்குகிறது. இங்கு சாதகமானதென்பது, தான் விரும்பியபடி அல்லது தான் எதிர் பார்த்தபடி எனக்கொள்ளலாம் அல்லவா?


இப்போது நான் சொன்னவைகளை வைத்து ‘சூழல் அல்லது சூழலின் காரணிகளை’ தன் அறிவைக் கொண்டு ஆள்வது தான் வெற்றியை தன் வசப்படுத்திக் கொள்ளும் மந்திரம் எனக் கொள்ளலாமா?


இது மிகப் பிரபலமான SWOT analyais போலத் தோன்றினாலும் சற்றே மாறுபட்டது.


இதுவரை நான் வரையறுத்தது: சூழல், சூழல் மாற்றம், சாதகமான சூழல் மாற்றம் வெற்றி பெற்ற உணர்வையும் பாதகமான சூழல் மாற்றம் தோல்வி பெற்ற உணர்வையும் அளிக்கிறது. வெற்றியும் தோல்வியும் உணர்வுகளே. உணர்வுகளைத்தவிர்த்து அவைகள் வெறும் சூழல் மாற்றங்களே என்பவைகளாகும்.


திசை மாறாமல் பேசுவோம். பேசித்தேடுவோம்.
கவனமாகக் கையாளவேண்டியிருப்பதால், நிதானமாய், சிறுகச் சிறுக பேசுவோம்.



அன்புடன்

வேதாந்தி.

Friday, August 20, 2010

வரமும் சாபமும்

வரமும் சாபமும்





வரமெல்லாம் வரமல்ல, சாபமெல்லாம் சாபமல்ல. என்ன குழப்புகிறேனா? இது குறித்துதான் இன்றைய பேச்சு.

உங்களுக்குத் தெரிந்த கதையைத்தான் சொல்லப் போகிறேன். இரண்டு கதைகள். இரண்டுமே புராணக் கதைகள்.

ஓர் அசுரன் சிவபெருமானை வேண்டி தவமிருந்து ஒரு வரம் பெற்றான். அது வேறு ஒன்றுமல்ல.  தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர் உட்னே எரிந்து சாம்பலாகி விடவேண்டுமென்பதுதான் அது.

தன் எதிரிகளை ஒழிக்க, தன் பலத்தைப் பெருக்கி எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்து தன் வாழ்நாளை நீட்டிக்க ஒரு வரம். வரத்தின் நோக்கம் இதுதான். . ஆனால் அது அவனுக்கு பயன் பட்டதா? அவனது புத்திக்கோளாறால் அவன் அந்த வரத்தைக் கொடுத்த சிவனிடமே அதை பரிட்சை செய்து பார்த்துவிட வேண்டி சிவனைத் துரத்த, கடைசியில் திருமால் சிவனைக் காத்திடும் பொருட்டு  அந்த அரக்கனைக் கவர்ந்த நாட்டிய மங்கையாகி அவனை நாட்டியப் போட்டிக்கு இழுக்க அவனும் சிவனைத் துரத்தும் வேலையை மறந்து நடன மங்கையிடம் தன் சாமர்த்தியத்தியத்தைக் காட்ட வேண்டி தானும் நடன மங்கையின் அபினயனங்களை பின் பற்ற முடிவில் தன் தலையில் தானே கையை வைத்து எரிந்து சாம்பலாகிப் போனான்.

இங்கு அவனுக்குக் கிடைத்த வரமே சாபமாகிப் போனது.

இன்னுமொரு கதை.

இந்திரன் ஒருமுறை ஒரு ரிஷி வம்ச கன்னிப்பெண்ணின் மீது ஆசை கொண்டு அவளைக் கூட முயற்சித்த போது அந்தப் பெண் ' கணவனல்லாத ஒருவனுடன் சல்லாபிக்க மாட்டேன்' என இந்திரனின் இச்சைக்கு உடன்பட மறுக்க, உடனே இந்திரன் அந்தப் பெண்ணை ' நீ விபசாரியாகி பொருளுக்கு உன் உடலை விற்கக் கடவது' என்று சபித்தானாம்.

அந்த ரிஷி மங்கையோ தன் புத்திசாலித்தனத்தால், இந்திரனின் சாபப்படி சல்லாபம் வேண்டி தன் வீட்டுக் கதவைத்தட்டும்  ஒவ்வொருவரிடமும், யார் ஒரு படி முத்தை விலையாகக் கொண்டு வருகின்றனரோ அவரே தன்னுடன் ஒரு இரவைக் கழிக்க இயலும் எனக்கூறி மறுத்துக் கொண்டே வந்தாராம். படி முத்தை விலையாகக் கொடுக்க யாராலும் முடியாததால் அந்த ரிஷிப் பெண் கன்னியாகவே இருந்தாராம். இறுதியில் தன் சாபம் பொய்த்துவிடக்கூடாதென்பதற்காக இந்திரனே ஒவ்வொரு இரவிலும் ஒரு படி முத்தைக் கொடுத்து சல்லாபித்து வந்தானாம். இந்திரன் கணக்குப்படி விலை பெற்றுச் சல்லாபித்ததால் அவள் விலை மாது. ஆனால் அந்த ரிஷிப் பெண்ணைப் பொருத்த மட்டில் இந்திரன் ஒருவனுடன் மட்டுமே தன் உடலைப் பகிர்ந்து கொண்டதால் தான் ஒரு பத்தினி. இந்திரனின் தர்மபத்தினி. யாரிடமும் சிக்காத play boy இந்திரனே இல்லறத்தில் சிக்கிய கதை இது.

இங்கு தனக்குக் கிடைத்த சாபமே ஒரு வரமானது.
இது எப்படி?

வரம் வரமாகவில்லை சாபம் சாபமாகவில்லையென்றால் situations nullify ஆகலாம் ஆனால் இங்கு situations reversal ஆகிறதே. இது எப்படி? இங்கு play ஆன attributes என்ன?

இது தெரிந்தால் நாமும் நமது சூழலை ஆளலாம் அல்லவா?


அன்புடன்

வேதாந்தி.
Related Posts Plugin for WordPress, Blogger...