Followers

Thursday, September 2, 2010

அனைத்திற்கும் ஆசைப்படலாமா?

2.9.10

அனைத்திற்கும் ஆசைப்படலாமா?










அனைத்திற்கும் ஆசைப்படலாமா? அனைத்தையும் ரசிக்கலாம் ஆனால் அனைத்திற்கும் ஆசைப்படலாமா?


இது வரை நாம் கண்டது போக இப்போது நாம் பார்க்கப்போவது வெற்றியின் அல்லது வெற்றி என்ற உணர்வின் மற்றொரு காரணி. அது நமது நோக்கம் அல்லது குறிக்கோள் (goal) ஆகும். நமது குறிக்கோள் என்பது நமது ஆசை எனவும் கொள்ளலாம். பொதுவாக மனிதனின் குறிக்கோள் என்பது தனது ஆசைகளை பூர்த்தி செய்துகொள்வதுதான்.


நாம் நமது நோக்கம் அல்லது குறிக்கோள் அல்லது ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ளும் போது நமக்கு வெற்றி பெற்ற உணர்வு கிடைக்கிறது. அல்லது ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்த உணர்வுகள் மிக முக்கியமானவைகள். தொடர்ந்த ஏமாற்றங்கள் ஒருவனது ஆளுமைத்தண்மையை பாதிப்பிற்குள்ளாக்கும்.


இன்னொரு செய்தி. நமது acheivements and aspirations சரியான நிலையில் இருக்கவேண்டும். Aspirations  ability  ஐ விட அதிகமான நிலையில் இருந்தால் achievements level குறைந்து விடும். அதாவது நமது ஆசையின் எல்லை நமது திறமை (அ) தகுதிக்கு மேல் இருந்தால் நம்மால் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியாது. இது தோல்வி மனப்பான்மையை உருவாக்கி விடும். Aspirations achievements level ஐ விட குறைவாக இருந்தாலும் frustrations அதிகமாகிவிடும். எனவே ability – aspirations – achievements ஆகியன ஒன்றிர்க்கொன்று சம நிலையில் இருக்கவேண்டும்.









இப்போது நான் முன்னே சொன்னவைகளை நினைவு கூறுங்கள். அனவரும் அனைத்திற்கும் ஆசைப்படுவது சரியாகுமா? Ability க்குத் தகுந்த aspirations இல்லாவிட்டால் அது imbalance ல் முடியும். அது ஆரொக்கியமான மன நிலைக்கு உகந்ததல்ல. ஆனால் அனைவரும் அனைத்தையும் ரசிக்க வேண்டும். இது சரியான மனநிலை. சரியான goal setting இருந்தால் தான் ஒருவன் வெற்றியைத் தேடமுடியும். அனைத்திற்கும் ஆசைப்பட்டால் failures and frustrations தவிர்க்க முடியாததாகிவிடும்.


அது சரி அப்போது அனைத்திற்கும் ஆசைப்படுவது எப்போது சரி, யாருக்கு சரி?


அனைத்திற்கும் ஆசைப்படுவது ஒரு corporate mentality . Corporate aspirations. ஒரு corporate தனது aspirations – அதாவது goal ஐ அடைய வேண்டுமானால், தனது corporate elements ஆன individuals அனைவரையும் தன் level க்கு கொண்டு போய் முறுக்கிப் பிழிந்து தனது goal ஐ நிறைவேற்றிக் கொள்ளவேண்டும்.இதை முன்னிட்டுத்தான் ஒவ்வொரு MBA க்களும் தயார் படுத்தப் படுகிறர்கள்.


தயை செய்து இங்கு கவனியுங்கள். Corporate கள் தனி மனிதனின் நிலைப்பாடுகளிலோ அல்லது தனி மனிதனின் மனநிலை வித்தியாசங்களையோ பொருட்படுத்துவதில்லை.அவனது மகிழ்ச்சியைக்கூட கண்டு கொள்வதில்லை. தனி மனிதனின் வெற்றி உணர்வுகளைக் கூட மதிப்பதில்லை. எனவே தான் அங்கு team spirit, or team sense ஐ மிகவும் வற்புறுத்துகின்றனர்.


ஆக ஒரு தனி மனிதனின் நோக்கும்( individual goal ), ஒரு குழுமத்தின் நோக்கும் ( corporate goal ), இதற்கும் மேல் ஒரு சமுதாயத்தின் நோக்கும் (community goal) வித்தியாசப் படுகின்றன. சமுதாயத்தின் நோக்குகளை நிறைவேற்றவும் சில MBA ட்ரிக்குகள் உண்டு. நினைத்துப் பாருங்கள். ஒருவன் ஊருக்குளே துப்பாக்கியைத் தூக்கினால் கொலைகாரன். அதையே ஒரு நாட்டின் எல்லையில் தூக்கினால் அவன் தியாகி. இது community goalreinforce செய்யும் ஒரு தந்திரம்.


நாம் இதையெல்லாம் தவிர்த்து தனிமனிதனின் நோக்கு,  தனிமனிதனின் சிறந்த நிலைப்பாட்டிற்கான வழிகள் ஆகியவை குறித்துத் தான் பேசப் போகிறோம். Corporate goal, community goal ஆகியவைகளில் சிக்காமல் இருந்தால் தான் நமது சூழலையும் அதைத் தொடர்ந்து வெற்றியையும் ஆளமுடியும்.



இதில் வரையரை செய்தவைகள்: aspirations, setting goal and achievements and their importance in well being of an individual.

மீண்டும் பேசுவோம்.

வேதாந்தி.

2 comments:

  1. நல்லாயிருக்குங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி நண்பரே.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி

    வேதாந்தி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...